காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச் சாலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு


காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச் சாலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 10:17 PM GMT)

காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

ஈரோடு சரகம் மற்றும் காஞ்சீபுரம் சரக உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு சொந்தமாக புதிய அலுவலகக் கட்டிடம் கட்ட நிதி வழங்கப்படும்.

காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச்சாலைகள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.32.76 கோடி ஒதுக்கப்படும்.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.

வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப யுவா பட்டுப்புடவைகள், கோர்வை ஜமுக்காளங்கள், கை அச்சிட்ட பருத்தி சேலைகள், பார்டர் இணைந்த அச்சிடப்பட்ட போர்வை போன்ற புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Next Story