மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் -அமைச்சர் விஜயபாஸ்கர்


மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் -அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 24 March 2020 8:19 AM GMT (Updated: 24 March 2020 8:19 AM GMT)

மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை, திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஒருவர் என மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மற்ற இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலும், மதுரை நபர் வெளிநாட்டுக்குச் சென்றவர் அல்ல. தமிழகத்தில் இருந்தே அவருக்கு வைரஸ் பாதித்துள்ளது தெரியவந்தது. இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் சமூக பாதிப்பு அதிகரித்துள்ளதாக பேசியுள்ளார்.

மேலும், கொரோனா பாதித்த மதுரை நபரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story