சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு


சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 25 March 2020 2:13 AM GMT (Updated: 25 March 2020 2:13 AM GMT)

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பர‌வுவதை தடுக்கும் வகையில், கோயம்பேடு சந்தையில் மொத்தமாக காய்கறி வாங்க மட்டுமே அனுமதி, சில்லறை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர ஆணையர் நேற்று அறிவித்து இருந்தார்.  

இதன் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று  சிறிய கடை வியாபாரிகள் மட்டுமே, காய்கறிகளை வாங்க வந்திருந்தனர். இந்த நிலையில்,  சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு  மேற்கூறிய விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது.

Next Story