கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து


கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து
x
தினத்தந்தி 26 March 2020 6:29 AM GMT (Updated: 26 March 2020 6:35 AM GMT)

கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறி வாங்க கடைகள் திறந்திருக்கும் என்று அரசுகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 

அதன்படி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் திறந்து இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை விடப்படும் என்று  வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கம்  இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சந்தை நாளையும், நாளை மறுநாளும் வழக்கம் போல இயங்கும் என்று  கோயம்பேடு அனைத்து சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story