தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 38 ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 38 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 March 2020 4:28 PM GMT (Updated: 27 March 2020 4:28 PM GMT)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.  மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் கூடுதலாக 3 பேர் பாதித்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.  இதனை தமிழக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

Next Story