மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு


மது கிடைக்காததால்  குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 April 2020 2:13 AM GMT (Updated: 4 April 2020 2:45 AM GMT)

புதுக்கோட்டை அருகே மதுகிடைக்காததால் ஷேவிங் லோசனை குடித்த இருவர் பலியாகினர்.

புதுக்கோட்ட, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மது கிடைக்காததால், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தப்படும் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்த மீனவர்கள் ராஜா, அருண்பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். அன்வர் ராஜா என்பவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story