கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? மு.க.ஸ்டாலின் கேள்வி


கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? மு.க.ஸ்டாலின்  கேள்வி
x
தினத்தந்தி 18 April 2020 9:28 AM GMT (Updated: 18 April 2020 9:28 AM GMT)

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ 

கொரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஷ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

அதேபோல், தமிழக அரசும் கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே  உயிர் காக்கப் போராடி வரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story