கருணாநிதி நினைவிடத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நல உதவி - முக கவசம், மளிகை பொருட்கள் வழங்கினார்


கருணாநிதி நினைவிடத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நல உதவி - முக கவசம், மளிகை பொருட்கள் வழங்கினார்
x
தினத்தந்தி 23 April 2020 9:45 PM GMT (Updated: 23 April 2020 8:41 PM GMT)

பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் அவர் மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம், கிருமிநாசினி, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நிதி உதவியையும், மளிகை பொருட்கள், காய்கறிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நலம் விசாரிப்பு

தொடர்ந்து தூய்மை பணியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story