’மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு’- முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


’மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு’- முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2020 8:56 AM GMT (Updated: 25 April 2020 8:57 AM GMT)

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனவும், தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர வேண்டும் எனவும் முதல் அமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

Next Story