தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை


தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 29 April 2020 1:34 PM GMT (Updated: 29 April 2020 1:34 PM GMT)

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 1210 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உள்ளது.

Next Story