தமிழகத்தில் 688 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் 688 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 19 May 2020 2:40 PM GMT (Updated: 19 May 2020 2:40 PM GMT)

தமிழகத்தில் 688 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 688 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் தமிழகத்தில் 601 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 87 பேர் ஆவர்.

தமிழகத்தில் 7,466 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இன்று ஒரே நாளில் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,760ல் இருந்து 12,448 ஆக உயர்ந்து உள்ளது.  3 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story