துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதி
தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,
தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அவருடைய உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு நேரில் செல்கிறார். துணை முதல் அமைச்சர் இன்று மாலை பரிசோதனைகளை முடித்து விட்டு வீடு திரும்பி விடுவார் என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story