சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை


சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை
x
தினத்தந்தி 31 May 2020 4:14 PM GMT (Updated: 31 May 2020 4:37 PM GMT)

மதுரவாயலில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.13 லட்சம் பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சென்னை,

சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். 

பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story