சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2020 11:31 PM GMT (Updated: 12 Jun 2020 11:31 PM GMT)

சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று நடந்த விழாவில், மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்புக் கடனுதவியாக 7 ஆயிரத்து 038 பேருக்கு ரூ.3,644.15 லட்சம் கடனுதவி வழங்கும் அடையாளமாக, விழா மேடையில் 9 பயனாளிகளுக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பயணியர் மாளிகையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 904 பேருக்கு பயிர்க் கடன், 191 பேருக்கு மத்திய காலக் கடன், 765 நபர்கள் அடங்கிய 53 சுய உதவிக் குழுக்களுக்கு சுய உதவிக் குழுக் கடன், 1,240 நபர்கள் அடங்கிய 62 சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்19 கடனுதவி என 3,100 பயனாளிகளுக்கு ரூ.1,074.22 லட்சம் வழங்கப்பட்டது.

கொரோனா நிதியுதவி தொகுப்பு

ஊரக வளர்ச்சித் துறை (மகளிர் திட்டம்) மூலம் கோவிட்19 சிறப்பு வங்கிக் கடனுதவியாக 466 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், வங்கிக் கடனுதவியாக 295 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சமூக முதலீட்டு நிதியாக 184 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், ஆதார நிதியாக 284 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், தனி நபர் கடனாக 245 நபர்களுக்கும் என 1,474 பயனாளிகளுக்கு ரூ.2,107.93 லட்சம் வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறை (ஊரக புத்தாக்க திட்டம்) மூலம் 154 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு, ஒரு ஊராட்சிக் கூட்டமைப்புக்கு தலா ரூ.2 லட்சம் வீதமும், 154 கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு கொரோனா சிறப்புநிதியுதவி தொகுப்பு, ஒரு சங்கத்திற்கு தலா ரூ.1 லட்சம் என 2,464 பயனாளிகளுக்கு ரூ.462 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story