சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது; ஒரே நாளில் 24 பேர் பலி
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,951 பேர் சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 24 பேர் பலியானார்கள்
சென்னை
சென்னை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 5,000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ராயபுரம் - 6951
தண்டையார்பேட்டை - 5717
தேனாம்பேட்டை - 5534
அண்ணா நகர் - 5260
கோடம்பாக்கம் - 5216
திரு.வி.க. நகர் - 3981
சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்தது.
சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். கே.எம்.சி. மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேரும்,ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story