காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு  கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 9:19 AM GMT (Updated: 27 Jun 2020 9:19 AM GMT)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 232 பேரும், திருவள்ளூரில் 177 பேரும், காஞ்சீபுரத்தில் 90 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 113 பேருக்கு  கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை1693 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 225 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story