கொரோனா பாதிப்பு: மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை


கொரோனா பாதிப்பு:  மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 Jun 2020 3:20 AM GMT (Updated: 29 Jun 2020 3:20 AM GMT)

கொரோனா பாதிப்பால் மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை:

மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 300 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை முழுவதும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடதக்கது.


மதுரையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த முதியவரை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிள்ளைகள்; சாலையில் சுற்றித்திரிந்தவரை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

கொரோனா உறுதியானதால் தனியார் கல்லூரி முகாமில் சிகிச்சைபெற்று வந்தார்.

மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Next Story