குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? - மு.க.ஸ்டாலின் கேள்வி


குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? - மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 29 Jun 2020 10:47 PM GMT (Updated: 29 Jun 2020 10:49 PM GMT)

குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதை சி.சி.டி.வி. காட்சிகள் உறுதிசெய்கின்றன. கொலையாளிகளை இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என முதல்அமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?

இரு அப்பாவிகளின் உயிரை பறித்த குற்றவாளிகளை பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதல்-அமைச்சர் செயலற்று இருப்பது ஏன்? முதல்-அமைச்சரின் பலவீனம் அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story