இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று


இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 30 Jun 2020 8:22 AM GMT (Updated: 30 Jun 2020 8:22 AM GMT)

மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

சேலம்: 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் என 700-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்..இவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க வந்த பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 5 பேர் உள்பட 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேர், ஓமலூரில் 14 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 13 பேர், கொங்கணாபுரம் பகுதியில் 10 பேர் மற்றும் தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர், சென்னையில் இருந்து சேலம் வந்த 2 பேர், தேனியில் இருந்து வந்த 13 பேர், தர்மபுரி, சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் வந்த தலா 3 பேர் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய சோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

Next Story