திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 Jun 2020 8:47 AM GMT (Updated: 30 Jun 2020 8:47 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3803 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,245 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,345 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 66 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story