தமிழகத்தில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 5 July 2020 1:05 PM GMT (Updated: 5 July 2020 1:05 PM GMT)

தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகிறது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டிய நிலையில், கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை 4,280 ஆக அதிகரித்தது. இதனால் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று நான்காவது நாளாக மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கொரோனா தொற்றில் இருந்து 2,186 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

Next Story