மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 6 July 2020 3:57 AM GMT (Updated: 6 July 2020 3:57 AM GMT)

மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன.  

மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகின்ற 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4380 ஆக உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் இன்று புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,126 ஆக அதிகரித்துள்ளது.

Next Story