சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக உள்ளது. சென்னையில் மொத்தம் தற்போது வரை 24,890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2837 பேர்
அண்ணா நகர் - 2349 பேர்
தேனாம்பேட்டை-2317 பேர்
ராயபுரம் மண்டலத்தில் - 2416 பேர்
தண்டையார்பேட்டை-2275 பேர்
திரு.வி.க. நகர்- 1858 பேர்
அம்பத்தூரில் 1272 பேர்
வளசரவாக்கத்தில் 1264 பேர்
அடையாறு 1913 பேர்
திருவொற்றியூரில்-1214 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story