சேலத்தில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சேலத்தில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை1,502 ஆக இருந்தது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்றுகாலை நிலவரப்படி புதிய உச்சமாக மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1600 ஐ கடந்துள்ளது.
இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story