திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு


திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 7:55 AM GMT (Updated: 13 July 2020 8:03 AM GMT)

திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது.

சென்னை 

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 325 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,980 ஆக உயர்ந்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,282ஆக உயர்ந்து உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,131 ஆக உயர்ந்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 607 பேர் நோய் குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டம் முழுவதும்  8,185 பேர் வீட்டு தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story