சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி


சாத்தான்குளம் இரட்டை கொலை  வழக்கு: எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 15 July 2020 2:41 PM GMT (Updated: 15 July 2020 2:41 PM GMT)

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் , அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட 10 பேரில் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா்.

இதற்கிடையே, ஆய்வாளா் ஸ்ரீதா் தரப்பினா் மனுவை திடீரென திரும்பப் பெற்ற நிலையில், உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு  மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளா் பால்துரை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story