தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 16 July 2020 1:06 PM GMT (Updated: 16 July 2020 1:06 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,56,369 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5,106  பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,157- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 69 உயிரிழந்துள்ளனர். 

Next Story