தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
தென்காசியில் இன்று மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
தென்காசி,
தென்காசியில் இன்று ஒரே நாளில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1017 ஆக அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 561 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உட்பட பல்வேறு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அச்சன்புதூரைச் சேர்ந்த 75 வயது முதியவர், புளியங்குடியைச் சேர்ந்த 56 வயது பெண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தென்காசியில் இன்று ஒரே நாளில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1017 ஆக அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 561 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உட்பட பல்வேறு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அச்சன்புதூரைச் சேர்ந்த 75 வயது முதியவர், புளியங்குடியைச் சேர்ந்த 56 வயது பெண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story