புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 122பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,293 ஆக உயர்ந்துள்ளது.
இதில் புதுச்சேரியில் 114 பேரும் காரைக்காலில் 8 பேர் என புதிதாக 122 பேருக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,953 ஆக உள்ளது. மேலும் 1,292 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story