சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 31 July 2020 10:22 AM GMT (Updated: 31 July 2020 10:22 AM GMT)

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,175 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,39,978 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடந்து அதிகரித்து வருவதால், மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. 

Next Story