திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது
x
தினத்தந்தி 1 Aug 2020 9:49 AM GMT (Updated: 1 Aug 2020 9:49 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. இன்றையை நிலவரப்படி தற்போது வரை 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,161 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை திருவள்ளூரில் 240 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 3,944 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 9,978 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story