இன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் தள்ளிவைப்பு - கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு


இன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் தள்ளிவைப்பு - கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 15 Aug 2020 12:57 AM GMT (Updated: 15 Aug 2020 12:57 AM GMT)

இன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டங்களை தள்ளிவைக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி இயக்குனர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1998-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்), ஆகஸ்டு 15-ந்தேதி (சுதந்திர தினம்), அக்டோபர் 2-ந்தேதி (காந்தி ஜெயந்தி) ஆகிய நாட்களில் கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், இன்று (15-ந்தேதி) நடக்க வேண்டிய கிராமசபா கூட்டத்தை தள்ளிவைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, இன்று கிராமசபா கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story