மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை
மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை,
மதுரையில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களின் நலனுக்காக புதிய மாவட்டங்கள், புதிய கோட்டங்கள் உருவாக்குவது போல இரண்டாம் தலைநகரமாக மதுரை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைச்சர்கள் உதயகுமாரும், செல்லூர் ராஜுவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதுரையில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களின் நலனுக்காக புதிய மாவட்டங்கள், புதிய கோட்டங்கள் உருவாக்குவது போல இரண்டாம் தலைநகரமாக மதுரை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைச்சர்கள் உதயகுமாரும், செல்லூர் ராஜுவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், “வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெறுவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்கான கோரிக்கை முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story