விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் - பாஜக மாநில தலைவர் முருகன்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை மாநில அரசு பின்பற்றுகிறதா? விநாயகர் சதுர்த்தியில் மட்டும் ஏன் பின்பற்ற முயற்சிக்கிறது?
டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்; ஊர்வலத்திற்கு அல்ல. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினர்.
பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை மாநில அரசு பின்பற்றுகிறதா? விநாயகர் சதுர்த்தியில் மட்டும் ஏன் பின்பற்ற முயற்சிக்கிறது?
டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்; ஊர்வலத்திற்கு அல்ல. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினர்.
Related Tags :
Next Story