அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 24 Aug 2020 12:24 PM GMT (Updated: 24 Aug 2020 12:24 PM GMT)

அமராவதி அணையில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்டவேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள்வந்துள்ளன. 

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக 26.8.2020 முதல் 24.12.2020 முடிய 120 நாட்களுக்கு 324 மி.க. அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story