மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுக்கு விரைவில் அவசர சட்டம்: எடப்பாடி பழனிசாமி தகவல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுக்கு விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று சவீதா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா, இணைய வழியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடி மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய் சிகிச்சை ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகமாகும்.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ கல்வி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 3,250 மருத்துவப் படிப்பு இடங்களுடன் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 1,650 புதிய இடங்களையும் சேர்த்து 2021-22-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்குவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story