தமிழகத்தில் கொரோனா பாதித்த முதியோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது


தமிழகத்தில் கொரோனா பாதித்த முதியோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 25 Aug 2020 11:28 PM GMT (Updated: 25 Aug 2020 11:28 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 107 பேர் பலியாகினர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 67 ஆயிரத்து 888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,615 ஆண்கள், 2,336 பெண்கள் என மொத்தம் 5,951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 14 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 236 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 841 முதியோர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,270 பேரும், கடலூரில் 370 பேரும், கோவையில் 322 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 22 பேரும், தர்மபுரியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 41 லட்சத்து 99 ஆயிரத்து 492 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 294 ஆண்களும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 980 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 18 ஆயிரத்து 433 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 50 ஆயிரத்து 184 முதியோர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 65 பேரும், தனியார் மருத்துவமனையில் 42 பேரும் என 107 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 20 பேரும், கோவையில் 8 பேரும், நெல்லையில் 7 பேரும், தஞ்சாவூர், திருச்சியில் தலா 6 பேரும், விருதுநகர், திருவள்ளூரில் தலா 5 பேரும், காஞ்சீபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலையில் தலா 4 பேரும், வேலூர், சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில் தலா 3 பேரும், கடலூர், மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடியில் தலா இருவரும், விழுப்புரம், திருப்பூர், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், பெரம்பலூர், நீலகிரி, நாகப்பட்டினம், ஈரோடு, திண்டுக்கல், செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 33 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 6 ஆயிரத்து 721 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 998 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 1,839 பேரும், சென்னையில் 1,136 பேரும், கோவையில் 497 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 128 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 899 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 794 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 9 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 63 அரசு நிறுவனங்களும், 78 தனியார் நிறுவனங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story