சென்னை போலீசில் புதிய பாதிப்பு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா


சென்னை போலீசில் புதிய பாதிப்பு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Aug 2020 10:15 PM GMT (Updated: 29 Aug 2020 10:15 PM GMT)

சென்னை போலீசில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை போலீசில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த பட்டியலில் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஒருவரும், டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இடம் பிடித்தனர்.

பாதிக்கப்பட்ட 16 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை போலீசில் அன்றாடம் கொரோனா தொற்று பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் போலீசார் வேகமாக குணம் அடைந்து வருகிறார்கள்.

அதன்படி நேற்று 21 பேர் குணம் அடைந்தனர். தற்போது சென்னை போலீசில் மொத்த கொரோனா பாதிப்பு 2,209 ஆகவும், குணம் அடைந்து பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 1,803 ஆகவும் அதிகரித்து உள்ளது.

Next Story