தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு


தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 7:38 AM GMT (Updated: 31 Aug 2020 7:38 AM GMT)

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். 

இதில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை நாளை முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story