தமிழகத்தில் செப்டம்பர் 15-ந் தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தமிழகத்தில் செப்டம்பர் 15-ந் தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 7:12 PM GMT (Updated: 31 Aug 2020 7:12 PM GMT)

தமிழகத்தில் செப்டம்பர் 15-ந் தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள், வரும் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சி-செங்கல்பட்டு இடையே விருத்தாசலம் மார்க்கமாக இயக்கப்பட்ட அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்: 02606/02605), மதுரை-விழுப்புரம் அதிவேக சிறப்பு ரெயில் (02636/02635), கோவை-காட்பாடி அதிவேக சிறப்பு ரெயில் (02680/02679), திருச்சி-செங்கல்பட்டு இடையே மயிலாடுதுறை மார்க்கமாக இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் (06796/06795), அரக்கோணம்- கோவை அதிவேக சிறப்பு ரெயில் (02675/02676), கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி சிறப்பு ரெயில் (02083/02084), திருச்சி-நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரெயில் (02627/02628) ஆகிய சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story