கொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


கொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 3 Sep 2020 6:56 AM GMT (Updated: 3 Sep 2020 6:56 AM GMT)

கொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை என்றும் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என்றும் தமிழக அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது. 

இதனிடையே வேலூரை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் கொரோனாவை தடுக்க அரசு தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும் கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, கொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேலும் தமிழக அரசு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Next Story