பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மற்றவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் வெடி விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் கவலைக்கிடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story