திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது
திமுக தோழமை கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று (திங்கட்கிழமை) தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி மூலம் ஆலோசனை நடந்த நிலையில், தற்போது தோழமைக் கட்சிகள் நேரில் ஆலோசனை நடத்தி வருகின்றன.
Related Tags :
Next Story