2018-2019-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு - அதிகாரிகள் தகவல்


2018-2019-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2020 1:21 AM GMT (Updated: 24 Sep 2020 1:21 AM GMT)

2018-2019-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

வருமான வரித்துறையில் கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.

அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந் தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வருகிற 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள், கணக்கு தாக்கல் செய்யாதோர், செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story