தமிழகத்தில் புதிதாக 5,679 பேருக்கு கொரோனா சென்னை, கோவையில் தொற்று அதிகரிப்பு


தமிழகத்தில் புதிதாக 5,679 பேருக்கு கொரோனா சென்னை, கோவையில் தொற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 11:45 PM GMT (Updated: 25 Sep 2020 9:30 PM GMT)

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னை மற்றும் கோவையில் தொற்று அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 93 ஆயிரத்து 2 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,455 ஆண்கள், 2,224 பெண்கள் என மொத்தம் 5,679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 140 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 712 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,193 பேரும், கோவையில் 661 பேரும், சேலத்தில் 297 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 28 பேரும், பெரம்பலூர், ராமநாதபுரத்தில் தலா 17 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 67 லட்சத்து 1,677 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 470 ஆண்களும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 870 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 30 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 162 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 73 ஆயிரத்து 325 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்து 926 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 35 பேரும் என 72 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேரும், சேலத்தில் 8 பேரும், வேலூரில் 7 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டு, திருப்பூரில் தலா 4 பேரும், திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூரில் தலா இருவரும், திருவாரூர், தென்காசி, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, கடலூரில் தலா ஒருவரும் என 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 148 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 626 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,164 பேரும், கோவையில் 517 பேரும், கடலூரில் 424 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 386 பேர் உள்ளனர்.தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 941 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 258 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் 4 தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 அரசு நிறுவனங்கள் மற்றும் 116 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 182 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story