சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி


சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி
x
தினத்தந்தி 26 Sep 2020 10:37 AM GMT (Updated: 26 Sep 2020 10:37 AM GMT)

சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் நடமாடும் நியாயவிலைக் கடைகளை முதல்வர் பழனிசாமி கடந்த 21-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. குக்கிராமங்களில் வசிக்கும் பொதுக்கள் இந்தத் திட்டத்தால் அதிக பலன் பெறுவார்கள். 

அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து பத்திரிகைகள்தான் குழப்பத்தை உருவாக்குகின்றன. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேவை இல்லாதவர்கள், மக்களால் வெறுக்கப்படக் கூடியவர்கள் என்ற நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

அதேபோல், முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. சுமுகமாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பத்திரப் பதிவு அதிகரித்து வருகிறது என்று கூறினார்.




Next Story