நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்


நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 Oct 2020 9:28 AM GMT (Updated: 10 Oct 2020 9:28 AM GMT)

நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும்,  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story