காலத்தால் அழியாத அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட்


காலத்தால் அழியாத அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட்
x
தினத்தந்தி 15 Oct 2020 6:39 AM GMT (Updated: 15 Oct 2020 6:39 AM GMT)

அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

கலாமின் 89-வது  பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன். #Abdulkalam என பதிவிட்டுள்ளார்.

Next Story