தமிழகத்தில், தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது


தமிழகத்தில், தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது
x
தினத்தந்தி 16 Oct 2020 9:14 PM GMT (Updated: 16 Oct 2020 9:14 PM GMT)

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்து 500 தாண்டியது. மேலும் தொடர்ந்து 5-வது நாளாக பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்து 500 தாண்டியது. மேலும் தொடர்ந்து 5-வது நாளாக பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 89 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,631 ஆண்கள், 1,758 பெண்கள் என மொத்தம் 4,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 29 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 200 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,140 பேரும், கோவையில் 387 பேரும், செங்கல்பட்டில் 261 பேரும், சேலத்தில் 244 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருந்தாலும் கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 85 லட்சத்து 19 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 79 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 208 ஆண்களும், 2 லட்சத்து 68 ஆயிரத்து 951 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 32 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 25 ஆயிரத்து 39 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரத்து 767 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 20 பேரும் என 57 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேரும், ஈரோட்டில் 5 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 4 பேரும், தர்மபுரி, சேலம், திருச்சியில் தலா 3 பேரும், கடலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருப்பூர், விருதுநகரில் தலா 2 பேரும், கோவை, காஞ்சீபுரம், தென்காசி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 10,529 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 245 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேரும், கோவையில் 913 பேரும், செங்கல்பட்டில் 322, சேலத்தில் 314 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 703 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 40 ஆயிரத்து 959 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 925 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 982 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 342 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது


Next Story