சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* சென்னை-பெங்களூரு ஏ.சி. ‘டபுள் டக்கர்’ அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06075), நாளை (புதன்கிழமை) காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இதைப்போல் பெங்களூரு-சென்னை ஏ.சி. ‘டபுள் டக்கர்’ அதிவேக சிறப்பு ரெயில் (06076), நாளை மதியம் 2.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story